சென்னை மருத்துவமனையில் ஜெயேந்திரருக்கு தொடர் சிகிச்சை -நலமாக இருப்பதாக தகவல்
சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்றிருந்த இடத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அவர் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லூரில் உள்ள சங்கர மடத்திற்கு ஜெயேந்திரர் சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை சென்னை கொண்டு வந்தனர்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அ்ங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் களைப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நலனில் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.