மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் அடக்கம்
மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடியே ஜெயேந்திரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Recommended Video

காஞ்சிபுரம்: மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சி சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு நேற்று காலை மூச்சுதிணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக காஞ்சி சங்கர மடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்னர் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

சாலிகிராம் கல்
ஜெயேந்திரர் முக்தி அடைவதற்காக இமயமலையில் உள்ள முக்திநாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாலகிராம் கல்லை அவரது தலையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.

குழி தோண்டப்பட்டது
பிருந்தாவனத்தில் மகா பெரியவரின் நினைவிடத்துக்கு அருகில் ஜெயேந்திரருக்காக 7-க்கு 7 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு நெய், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

சந்தன நாற்காலி
ஜெயேந்திரர் உயிரோடு இருந்த வரை சந்தன நாற்காலியில் அமர்ந்திருந்தார். அதுபோல் அவர் இறந்த பிறகும் அதே நாற்காலியில் அமர்வதற்கென புதிதாக சந்தன நாற்காலி செய்யப்பட்டது. அதில் ஜெயேந்திரரை அமர வைத்து அதன் மேல் பெரிய மூங்கில் கூடை வைத்து மூடப்பட்டது.

நல்லடக்கம்
ஜெயேந்திரரின் உடல் மீது வசம்பு, சந்தனக் கட்டைகள், உப்புகற்கள் ஆகியன நிரப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து மணல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பூசப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் மேல் மகா பெரியவருக்கு இருப்பது போல் நினைவிடம் கட்டப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications