4 நாட்களாக நடந்த நகைக்கடை உரிமையாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ்
சென்னை: தங்க நகைகள் மீதான கலால் வரி உயர்வு குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதையடுத்து நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் பான் எண்ணை கட்டாயம் பெற வேண்டும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் கடந்த 2ம் தேதி முதல் கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தால் 3 நாட்களில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்க பிரிதிநிதிகள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து கலால் வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். வரி உயர்வு குறித்து பரிசீலிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சென்னை தங்க, வரை நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து இன்று அனைத்து நகைக்கடைகளும் திறக்கப்படும் என்றும், மும்பையில் நடக்கும் நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஜெயந்திலால் மேலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications