ஐஸ்வர்யா நடித்த சர்ச்சை விளம்பரத்தை திரும்பப் பெறுகிறோம்.. கல்யாண் ஜுவல்லர்ஸ்!
சென்னை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடை நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராய் உள்ளார். இந்த நகை கடையின் விளம்பரம் இனவெறியை வெளிப்படுத்துகிறது, சிறார் அடிமைத்தனத்தை ஆதரிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பரா நக்வி, நிஷா அகர்வால், எனாக்ஷி கங்குலி, பார்தி அலி, மது மேஹ்ரா, சாந்தா சின்ஹா, ஹர்ஷ் மந்தர், மிருதுளா பஜாஜ் ஆகியோர் கையெழுத்திட்டு ஒரு கடிதம் எழுதி இருந்தனர்.

இதற்கு ஐஸ்வர்யா தனது பிஆர்ஓ மூலமாக அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், புகைப்படம் எப்படி வர வேண்டும் என்பது கிரியேட்டிவ் இயக்குநருடைய உரிமையாகும்.
அதில் யாரும் தலையிட முடியாது. நானும் தலையிட முடியாது. இருப்பினும் உங்களது கருத்துக்களை நான் தாழ்மையுடன் பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட கிரியேட்டிவ் இயக்குநருக்கும், குழுவினருக்கும் அனுப்பி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் அந்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக கூறி உள்ளனர்.
" அந்த கிரியேட்டிவ் காலவரையல்லாத அழகு மற்றும் நேர்த்தி படைப்பு ராயல்ட்டியை முன்வைக்க வேண்டி இருந்தது. எனினும் கவனக்குறைவாக அது தனிபட்ட நபர் அல்லது நிறுவனங்களை புண்படுத்துவதாக இருந்தால் நாங்கள் ஆழ்நத வருத்ததை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் பிரசாரத்தில் இருந்து அந்த விளம்பரத்தை திரும்ப பெறும் முயற்சியை தொடங்கி விட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications