வீட்டை உடைத்து நகை கொள்ளை… மர்ம நபர் கைவரிசை.. போலீசார் தேடுதல் வேட்டை
பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி: பகவதிபுரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமம் அருகே தெற்கு பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஷிவானி என்ற மகள் உள்ளார். இவர் சிவகாசியில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் தங்களது மகள் ஷிவானியை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஷ்வரி சிவகாசிக்கு புறப்பட்டுச் சென்றார். அதிகாலை 3 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு மகேஷ்வரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்ற போது வீட்டின் உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் பின்பக்க கதவு வழியாக ஓடினார்.
இவர்கள் திருடன், திருடன் என கூச்சலிட்டதுடன் அந்த வாலிபரையும் துரத்தினார்கள். வீட்டை விட்டு வெளியே சென்ற கொள்ளையன் அந்த பகுதியில் தயார் நிலையில் நின்ற கார் ஒன்றில் ஏறி தப்பி ஓடி விட்டான். இதைத் தொடர்ந்து மகேஷ்வரியும், ஷிவானியும் வீட்டின் மற்ற அறைகளுக்குச் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பல பவுன் நகை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வேணுகோபால், இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications