காமராஜர் ஆண்ட தமிழகத்தில் இப்போது ஜோக்கர் ஆட்சி நடைபெறுகிறது.. கர்நாடக அமைச்சர் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஜோக்கர் ஆட்சி நடைபெறுகிறது என்று கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்துள்ளார்.

கர்நாடக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ரோஷன் பெய்க், இன்று நாகூர் தர்காவிற்கு வழிபாடுக்காக வந்திருந்தார். பிறகு நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது ஜோக்கர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Joker's rule is taking place in TamilNadu, says Karnataka Minister R.Roshan Baig

காமராஜர் போன்றோர் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தனர். அந்த மாநிலத்தில் இப்போது ஆட்சி நிலைமை இப்படி மாறியுள்ளது என்று ஆதங்கம் வெளிப்படுத்தினார்.

மேலும், தமிழகம்-கர்நாடகா நடுவே நல்லுறவு நீடிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மூத்த காங்கிரஸ்காரரான ரோஷன் பெய்க், பெங்களூரில் தமிழர்கள் கணிசமாக வசிக்கும் சிவாஜி நகர் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+