இதுவா மத்திய அமைச்சரின் வேலை?.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஜோதிமணி கேள்வி!
மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது தெரியுமா என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் தெரியுமா என்று இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், காவிரிப் பிரச்னையில் கன்னடர்களை பாதிக்கும் வகையில் ரஜினி பேசியதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதுவா ஒரு மத்திய அமைச்சரின் முக்கியப் பணி? pic.twitter.com/O639MT2uc8
— Jothimani (@jothims) June 2, 2018
இதுவரை தமிழுக்கு என்று எந்தப் பணியும் ஆற்றாத, திமுக ஒரு தமிழ்ப்படம் வெளியாவதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஒரு மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.