ஏன் எழுத வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்.. பன்னீரை கலாய்க்கும் ஜோதிமணி!
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பது போல தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பன்னீர்செல்வம், அடுத்த ஒரே மணி நேரத்தில் அதற்கு எதிராக வேறு ஒன்றைப் பதிவை செய்ததைக் கலாய்த்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி.
இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்பதில்தான் அ.தி.மு.கவின் இரண்டு அணிகளின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் பணியில் இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து அறிவிப்போடு தினகரனின் அரசியல் ஆசையும் முடிவுக்கு வந்துவிட்டது. அவரால் பழையபடி ஆக்டிவ் பாலிடிக்ஸில் கவனம் செலுத்த முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரண்டு அணிகளுக்குள்ளும் இருக்கும் உள்முரண்பாடுகளால் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

டெல்லிக்குப் போன ஓ.பி.எஸ்
நேற்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.கவில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் ஆதரவு குறித்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் விவாதித்தார். அதன்பிறகு நேற்று மாலை பிரதமரை சந்தித்துப் பேசினார்.

என்ன பேசினார்கள் இருவரும்
தமிழகத்தின் பிரச்னைகள் தொடர்பாக விவாதித்ததாகவும் தகவல் பரப்பினர். உள்ள இரண்டு அணிகளையும் ஒன்றிணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சி இதுவரை கைகூடவில்லை. இரண்டு அணிகளிலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால், ஒன்றிணைவதில் சிக்கல் நீடித்துவருகிறது.

டிவிட்டரில் உளறிய ஓபிஎஸ்
இந்நிலையில், இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஷாக்காகிப் போன ஓ.பி.எஸ்.
இதனைக் கண்டித்து பல எதிர்வினைக் கருத்துக்கள் வந்தன. இதனால் அதிர்ந்து போன பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று ஆலோசிக்கப்படும் எனப் பதிவு செய்தார். சில மணி நேரங்களில் ஏற்பட்ட மனமாற்றத்தை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். மக்கள் மத்தியில் ஆழம் பார்க்கவே இவ்வாறு பதிவிட்டார் என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.
|
கலாய்த்த ஜோதிமணி
இதுகுறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, ' பா.ஜ.கவிற்கும் பன்னீர்செல்வத்திற்கும் உள்ள உறவு வெளிப்படையான ஒன்றுதான். எதற்கு ட்வீட் போட்டு பிறகு அழிக்கவேண்டும் எனக் கலாய்த்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications