Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ஆட்சி.... ஜோதிமணியின் நெத்தியடி கேள்வி....!

அதிமுக ஆட்சியில் ஒரு அதிகாரிக்கே ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் சொத்து உள்ளது என்றால் அந்த ஆட்சியின் ஊழல் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கரூர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு அதிகாரியின் சொத்துக் கணக்கே ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் இருந்தால் அந்த ஆட்சியின் ஊழல் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் ஊழல் அவலங்கள் படிப்படியாக வெளியாகி வருகிறது. உச்சகட்டமாக அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான தலைமைச் செயலாளர் ராமமோகன ராவே மிகப் பெரிய அளவில் ஊழல் பெருச்சாளியாக இருந்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது. பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு விட்ட அவர் தற்போது கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கப் போராடி வருகிறார்.

Jothimani wonders ADMK govt's corruption

இந்த நிலையில் கரூர் ஜோதிமணி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், ஒரு அதிகாரியின் சொத்துமதிப்பு ஆயிரக்கணக்கான கோடிகள் என்றால் அந்த ஆட்சி எவ்வளவு பெரிய ஊழல்ஆட்சி? ஆட்சியாளர்களிடம் இன்னும் எவ்வளவு இருக்கும் ? என்று கேள்வி கேட்டுள்ளார்.

பொட்டில் அடித்தாற் போன்ற கேள்விதான்.. ஆனால் அனைத்து ஊழலும் வெளி வருமா என்பதுதான் சந்தேகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+