ஜெ சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி குமாரசாமி விடுப்பில் உள்ளதால், வேறு நீதிபதி பில்லியப்பா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே, ஜெயலலிதா மீதான வழக்கில், அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராக கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர் வராகி என்பவர் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications