இசைப்பிரியா படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி: தமிழீழ செய்தியாளர் இசைப்பிரியா படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் சிங்கள ராணுவத்திடம் சிக்கிய இலங்கை தமிழ் ஊடக செய்திவாசிப்பாளர் இசைபிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்த வீடியோ அண்மையில் வெளியானது. இந்த கொடூர செயலைக் கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த தடை விதிப்பதுடன், காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்தியா அம்மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பது பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள். இதை வலியுறுத்தி தூத்துக்குடி பாளை சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்தணசேகர், ஐஜேக மாவட்ட பொருளாளர் இசக்கிராஜா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். பிரஸ் மீடியா அசோசியேஷன் துணைத் தலைவர் ராஜாசாலமோன், இணைச் செயலாளர் உலகாள்வோன், வழக்கறிஞர் மாடசாமி, மூத்த பத்திரிக்கையாளர்கள் குமாரவேல், நாசரேத் முருகன் உள்ளிட்ட செய்தியாளர்கள், புகைப்பட வீடியோ கலைஞர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications