சொத்துகள் ஏல விவகாரம்: கே. பாலச்சந்தர் மகள் விளக்கம்
சொத்துகள் ஏல விவகாரம் தொடர்பாக கே. பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்- வீடியோ
சென்னை: மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் வீடு, அலுவலகம் ஏலத்தில் விடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அவரது மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை யூகோ வங்கியில் ரூ1.36 கோடி கடனுக்காக பாலச்சந்தர் அலுவலகம், வீடு ஏலத்தில் விடப்படும் என ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் வெளியாகி இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக இன்று கே. பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் வங்கிக் கடன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து கே.பியின் வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தி பரவிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications