தொடரும் கள்ளச்சாராய பலி.. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலையில் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 140க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.

இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூலி வேலைக்கு சென்று ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் டாஸ்மாக் மதுபானத்துக்கு பதில் பாக்கெட்டுகளில் ரூ.50, ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இந்த சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.
இதுதான் அவர்களின் உடல் நலப்பாதிப்புக்கு முக்கிய காரணமாகும். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர். நேற்று வரை மொத்தம் 60 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று காலையில் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. அதாவது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் என்பவர் இன்று காலையில் பலியானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பலியாகி உள்ளார். பலியான ஏசுதாசுக்கு வயது 35 ஆகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தமட்டில் தீவிர சிகிச்சைக்காக மொத்தம் 20 பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 4 பேர் பலியாகி உள்ள நிலையில் 6 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக மொத்தம் 140க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications