என்னை கைது செய்தாலும் சட்டம் பாதுகாக்கும்.. கமல்ஹாசன் அதிரடி பேட்டி!
சென்னை: தன்னை கைது செய்தாலும் சட்டம் பாதுகாக்கும் என பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கலாசார பண்பாட்டை கெடுக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் விளக்கம் அளித்தார். என்னை கைது செய்ய வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சட்டம் பாதுகாக்கும். என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது நடக்கட்டும். என்னை கைது செய்யக்கூறும் கூட்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications