திருச்சியில் கமல் கட்சி பொதுக் கூட்டம்: காவிரி குறித்து முக்கிய அறிவிப்பு இருக்குமா?
திருச்சியில் கமல் கட்சியின் பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
Recommended Video

திருச்சி: திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் காவிரி விவகாரம் குறித்து அவர் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதையடுத்து இன்று திருச்சியில் முதல் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். திருச்சியில் காவிரிக்காக விமான நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து திருச்சியில் அனுமதியின்றி நடத்தப்படும் போராட்டம், பொதுக் கூட்டம் நடத்த ஏப். 18-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் கமல்ஹாசனின் பொதுக் கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுவிட்டதால் அவரது கூட்டத்துக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று மதியம் கமல் ரயில் மூலம் திருச்சி சென்றார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த கமலிடம் காவிரிக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் போராட்டம் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல், இதுகுறித்து திருச்சி பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார். எனவே இன்றைய தினம் மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கமல் முன்வைப்பார் என்றும் காவிரி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications