கர்நாடகத்தில் முறையாக பேசினால் காவிரி தண்ணீர் கிடைக்கும்- கமல் அதிரடி
கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் மட்டுமல்ல, ரத்தத்தையும் வாங்கி கொடுப்பேன் என்று கமல் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல இரத்தத்தையும் கொண்டு வருவேன் - கமல்
மதுரை: கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் மட்டுமல்ல எங்களால் ரத்தத்தையும் வாங்கி கொடுப்பேன் என்று கமல் கூறியுள்ளார்.
மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி வைத்து கமல் பேசுகையில், காவிரி நீர் விவகாரத்தில் நான் எதையும் பேசவில்லை என்கிறார்கள்.

காவிரி நீர் விவகாரத்தில் முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கானதை பேசி பெற முடியும். எங்களால் காவிரி நதியிலிருந்து நீர் மட்டுமல்ல, ரத்தத்தையும் வாங்கி தருவோம்.
ரத்தம் என்றவுடன் நான் ஏதோ வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதாக நினைக்கக் கூடாது. சுனாமி பேரலையின்போது நம் மாநில மக்களுக்கு பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் ரத்தத்தை தானமாக அளித்தனர். அதைத் தான் கூறுகிறேன் என்றார் கமல்.












Click it and Unblock the Notifications