காவிரி டெல்டாவில் இருந்து மநீமவில் இணைந்தோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கமல்ஹாசன்
காவிரி டெல்டா பகுதியில் இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கினார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி டெல்டா பகுதியில் இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கினார்.
திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற எஸ்பி, ஆட்சியர், விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். டான்ஸ் மாஸ்டர் ஷோபி மற்றும் திருச்சி உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பலரும் கட்சியில் இணைந்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கி வரவேற்றார்.












Click it and Unblock the Notifications