அரசுக்கு எதிராக கமல் பேசுவது வெறும் பேச்சுதான்.. அரசியல் களத்துக்கு வாங்க.... சீமான் சுளீர்
நடிகர் கமல் பேசுவது வெறும் பேச்சுதான். அவர் அரசியல் களத்திற்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை; நடிகர் கமல் ஹாசன் பேசுவது வெறும் பேச்சுதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நேற்று சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இதற்காக ஏன் அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கவிலை என்றும் கமல் கூறுவதும் வெறும் பேச்சுதான் என்றார்.

குரல் கொடுத்த உடன் ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் இல்லை. ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கமல் அறிவித்தால் நாங்கள் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று சீமான் கூறினார்.
அதே போன்று, சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்கக் கமல் குரல் கொடுப்பேன் என்று சொன்னால் அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று சீமான் கூறினார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கேட்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதே போன்ற காரணம் அடுத்த ஆண்டும் இருக்கும். அதனால்தான் நிரந்தர தீர்வு வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றும் சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications