கிருஷ்ணசாமியின் உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை மக்கள் நீதி மய்யம் உதவும் : கமல்ஹாசன்
நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்துச்சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு கமல் உதவி செய்கிறார்
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத தமது மகனை கேரளா அழைத்துச் சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்யும் என அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமான மாணவர்கள் கேரளாவில் பல தேர்வு மையங்களில் எழுதினார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு, திருத்துறைபூண்டியில் இருந்து சென்றார் கிருஷ்ணசாமி.

இரவு முழுவதும் தூங்காமல் ரயிலில் நின்று கொண்டே சென்ற கிருஷ்ணசாமி, மகனை தேர்வு மையத்தில் விட்டுவிட்டு தங்கும் அறைக்குச் சென்றார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹசான் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன்.மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை உதவிகள் செய்யும் மக்கள் நீதி மய்யம். @maiamofficial
— Kamal Haasan (@ikamalhaasan) May 6, 2018
அதில், " ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன்.மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை உதவிகள் செய்யும் மக்கள் நீதி மய்யம்.".
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications