8 கிராமங்களை தத்தெடுத்த கமல்... கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை
8 கிராமங்களை கமல்ஹாசன் தத்தெடுத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகத்தூர் கிராமமும் அதில் அடங்கும்.
திருவள்ளூர்: மொத்தம் உள்ள 12 ஆயிரம் கிராமங்களில் 8 கிராமங்களை தத்தெடுத்த கமல், அங்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார்.
மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறுகையில் 12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க இயலாது. அதனால் 8 கிராமங்களை தத்தெடுத்துள்ளோம். மக்களின் ஆதரவும் உதவியும் இருந்தால் 12 ஆயிரம் கிராமங்களை எங்களால் தத்தெடுக்க முடியும்.
வெற்றி பெற நினைக்கும் பாதையில் நாங்கள் நடக்கிறோம். எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களுக்கு உதவவில்லை.
தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். கல்விக்கு நிகரானது ஆரோக்கியம். அதனால் 100 கழிப்பறைகள் கட்டித் தரப்படும். கிராமங்கள் இன்னும் பசுமையாக இருக்க மரங்களை நடவுள்ளோம்.

திறமைகளை வளர்த்து கொள்வதற்காக கிராம மக்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். நீர் சேகரிக்க வசதியாக குளம், குட்டைகள் சீரமைக்கப்படும், புனரமைக்கப்படும்.
செய்ய முடியும் விஷயங்களை செய்வோம். செய்ய முடியாததை எங்களால் முடியவில்லை, எப்படி செய்ய வேண்டும் என உங்களுடன் கலந்தாலோசித்து செய்வோம் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications