பெரியாரைப் பற்றி சும்மா பேசினால் மட்டும் போதுமா? சத்யராஜுக்கு கமல்ஹாசன் கேள்வி!
சென்னை: தந்தை பெரியார் பற்றி சும்மா பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? செயலில் எதுவும் காட்ட வேண்டாமா? என்று சத்யராஜூக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் அவ்வப்பொழுது டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி குறித்தும் பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார் கமல்.
தற்போது தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இதுகுறித்து கமல் டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், "சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒரு dubsmash ஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors" என்று பதிவிட்டுள்ளார்.
சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors
— Kamal Haasan (@ikamalhaasan) February 8, 2017
அதேபோல் நடிகர் மாதவனை நோக்கி அவர் தமிழகத்தில் நிலவும் சிக்கலைப் பற்றி பேசுங்கள். உங்கள் கருத்து மாறுபட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. பேசுங்கள் என்று கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.