ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் போன மனைவி.. பின்னாடியே போன கணவன்.. நடந்த பயங்கரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மனைவியை, கணவன் தள்ளிவிட்டு தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா என்பவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். சிவா கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பூமா தேவி என்பவரை காதலித்து கல்யாணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் , சிவாவின் மனைவியும் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கட்டிட வேலை செய்ய போன இடத்தில் படப்பை அருகே டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்த சுந்தர் என்பவருடன் பூமா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆண் நண்பர் சுந்தருடன், பூமா தேவி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தன் மனைவி காதலனுடன் செல்வதை கண்டு சிவா ஆத்திரமடைந்துள்ளார். அவர்களை பின் தொடர்ந்து சென்ற சிவா, இரு சக்கர வாகனத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி விட்டார்.
இதில் சிவாவின் மனைவி பூமா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பூமாதேவியின் கணவர் சிவாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மனைவியை, கணவன் தள்ளிவிட்டு தீர்த்து கட்டிய சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications