காஞ்சிபுரம் குப்பைத்தொட்டியில் மூட்டைகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டது தெரியவந்தது. ஓரிக்கை பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையின் முன்பு உள்ள குப்பைத் தொட்டியில்தான் இந்த வாக்காளர் அட்டைகள் கிடப்பது தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications