ரக்ஷாபந்தனான இன்று ஸ்டாலினிடம் அன்பை வெளிப்படுத்திய கனிமொழி!
சென்னை: ரக்ஷாபந்தன் நாளான இன்று திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் ஸ்டாலினிடம் கனிமொழி அன்பை பொழிந்து வாழ்த்து கூறினார்.
கருணாநிதிக்கு பிறகு திமுகவின் 2-ஆவது தலைவராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அதற்கான தேர்தல் வரும் 28-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. வேட்புமனுவை தாக்கல் செய்ய ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்திருந்த கனிமொழி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரை அவருக்கு முத்தத்தை பரிசாக வழங்கினார். இன்று ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது.

சகோதர- சகோதரித்துவத்தை வெளிப்படுத்தும் வடமாநிலத்தவர்களின் நிகழ்ச்சி இதுவாகும். இந்நிலையில் அதற்கு பொருத்தமாக ஸ்டாலினுக்கு முத்தத்தையும் மகிழ்ச்சியையும் பரிசாக வழங்கியுள்ளார் கனிமொழி.
இன்று காலை கருணாநிதியின் சமாதிக்கும் கோபாலபுரத்துக்கும் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் கனிமொழி தனது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதை தொண்டர்கள் நெகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications