திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்த ஜெ- கனிமொழி சாடல்
தூத்துக்குடி: திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ளதாக அக்கட்சி எம்.பி. கனிமொழி கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து கனிமொழி தூத்துக்குடி வந்தார். அவரை தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜூவன், நாகர்கோவில் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவின் தேர்தலை அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அதிமுகவின் தலைமை வழஙகியுள்ளது. பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் தருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி சுமை ஏற்படும்.
சட்டசபை தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டார்கள். அதிமுக தலைமையின் பொய்யை இனியும் மக்கள் நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு கனிமொழி கூறினார்.












Click it and Unblock the Notifications