பெருமையான தருணம்... இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி கே சிவனுக்கு டிடிவி தினகரன், கனிமொழி வாழ்த்து
இஸ்ரோவின் புதிய தலைவர் சிவனுக்கு டி.டி.வி தினகரன், கனிமொழி ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சிவனுக்கு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மற்றும் கனிமொழி எம்.பி., ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண்குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து. அதன் புதிய தலைவராக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் கே. சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சிவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே சிவன் அவர்கள் இஸ்ரரோ தலைவராக பதவி ஏற்பது குறித்து எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு இது பெருமையான தருணம்! உங்களது சீரிய தலைமையில் இஸ்ரோ மேலும் பல பெருமைகளை அடையும் என்று நம்புகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 12, 2018
இந்நிலையில் ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக டி.டி.வி. தினகரன் அவர்கள் ட்விட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே சிவன் அவர்கள் இஸ்ரரோ தலைவராக பதவி ஏற்பது குறித்து எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு இது பெருமையான தருணம்! உங்களது சீரிய தலைமையில் இஸ்ரோ மேலும் பல பெருமைகளை அடையும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
‘இஸ்ரோ’வின் புதிய தலைவராக தமிழரான திரு.சிவன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை வகிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இவர் தலைமையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் pic.twitter.com/lalMq2C8Fd
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 11, 2018
அதேபோல திமுகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழியும் சிவனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இஸ்ரோ'வின் புதிய தலைவராக தமிழரான திரு.சிவன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை வகிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இவர் தலைமையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications