மாநிலங்களவை தி.மு.க. எம்.பி. கனிமொழி மருத்துவமனையில் அனுமதி...நேரில் நலம் விசாரித்தார் கருணாநிதி..
சென்னை : திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தைராய்டு கட்டியால் கனிமொழி சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தைராய்டு கட்டியை அகற்றினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கனிமொழியை திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதியும், கனிமொழியை பார்த்து நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலுவும் வந்திருந்தனர்.
பின்னர் வெளியே வந்த கருணாநிதியிடம், செய்தியாளர்கள்
கனிமொழி உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கருணநாநிதி, கனிமொழியின் பின் கழுத்தில் தைராய்ட் சுரப்பி ஒன்றை அகற்ற வேண்டும் என்று கூறி டாக்டர்கள் அதற்கேற்ற சிகிச்சையை செய்தனர். இன்று காலையில் அறுவை சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை டாக்டர்கள் அகற்றி விட்டார்கள்.
கனிமொழி உடல் நலம் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications