நான் சொன்னேன், நீங்க செஞ்சு காட்டுங்க – பொன்.ராவிற்கு ஹெச். வசந்தகுமார் வேண்டுகோள்
நெல்லை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றிபெற்றால் என்னவெல்லாம் செய்வேன் என்று கூறிய வசந்தகுமார் அதை வெற்றிபெற்ற வேட்பாளர் செய்ய வேண்டும் என்று வினோத கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அதில்,2.44 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் ஹெச். வசந்த குமார்.
இந்த நிலையில் வசந்தகுமார் ஒரு வித்தியாசமான நன்றி அறிவிப்பை விளம்பரமாக வெளியிட்டுள்ளார். அதில், தான் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்து தருவேன் என்று கூறி வாக்குகளை பெற்றாரோ, அதையெல்லாம் தனது நன்றி அறிவிப்பு விளம்பரத்தில் வரிசைப்படுத்தி சொல்லியுள்ளார்.
மேலும், தான் வெற்றி பெற முடியாமல் போனதால், இதையெல்லாம் தற்போது வெற்றி பெற்ற வேட்பாளரான மத்திய இணை அமைச்சரான பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன் நிறைவேற்றித் தரவேண்டும் என்று ஒரு வித்தியாசமான கோரிக்கையையும் வைத்துள்ளார்.
பத்திரிக்கைகளில் வெளியிட்டுள்ள இந்த வித்தியாசமான விளம்பரம் மக்களைக் கவர்ந்துள்ளது.