சொந்தப் படத்தால் ஒரு கோடி ரூபாயை இழந்துவிட்டு, ஓட்டல் நடத்த வந்திருக்கும் கஞ்சா கருப்பு!
சல்மான்கான், ஷாருக்கான் என வட இந்திய நடிகர்களில் தொடங்கி விஜயகாந்த், ஆர்யா, ஜீவா, த்ரிஷா, ஆர்.கே, கருணாஸ் என நம்மூர் நட்சத்திரங்களில் பலரும் ஹோட்டல் பிசினஸில் குதித்தவர்கள்.
இதில் சிலர் வெற்றியும், பல நட்சத்திரங்கள் தோல்வியும் கண்டு வந்தாலும் ஹோட்டல் பிசினஸ் என்றால் ஒரு கை பார்த்து விடலாம்... என களம் இறங்காத கலைஞர்கள் குறைவு!

அந்த வகையில் ஹோட்டல் பிசினஸில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் வரிசையில் இடம் பிடித்தே தீருவேன்... என கங்கணம் கட்டிக்கொண்டு சென்னையில் நல்லதொரு செட்டி நாடு உணவகத்தை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.
இதுகுறித்து அவர் கூறும்போது, "இத்தனை நாளா நடிச்சு, சிரிச்சு குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருந்தேன். அத வச்சி, ஒழுங்கா பள்ளிக்கூடம் போயி, நாலு எழுத்து படிச்சு அறியாத எனக்கு, நாலு ஏழை பிள்ளைங்களுக்கு பயன்படுற மாதிரி ஸ்கூல் ஆரம்பிக்கணுங்கறது ஆசை. அது முடியாத பட்சத்தில் டாக்டருக்கு படிச்ச என் மனைவிக்கு சின்னதா ஒரு ஆஸ்பத்திரி கட்டி தரணுங்கறது ஆசையா இருந்துச்சு!
இந்த சமயத்தில கூட்டாளிங்க சில பேரு கொடுத்த ஐடியா., கொஞ்சம் காச வச்சிக்கிட்டு முழுசா ஸ்கூலும் கட்டமுடியாது, பெரிசா ஆஸ்பத்திரியும் கட்டமுடியாது... அந்த காசுல ஒரு படம் சொந்தமா எடுத்தோமுன்னா நல்ல லாபம் கிடைக்கும். அத வச்சு ஸ்கூலு, ஆஸ்பத்திரி, இரண்டையும் கட்டலாம். அப்படின்னு சொன்னாங்க, ஐடியா நல்லாருக்கேன்னு அகலக்கால் வச்சேன்.

அப்படி சொன்னவரையே டைரக்டரா போட்டு "வேல்முருகன் போர்வெல்ஸ்"ன்னு ஒரு படத்தை சொந்தமா தயாரிச்சு ஹீரோவாவும் நடிச்சேன். ஒரு கோடி ரூபாக்கு மேல நஷ்டம்!
அதான்., ஆரம்பத்துல டீக்கடையில வேல பார்த்த நாம் ஏன்? டிபன் கடை போடக்கூடாதுன்னு யோசிச்சேன்..? இந்த சமயத்துல என் கோடம்பாக்கத்து ஆருயிர் நண்பர் பாடலாசிரியர் ஜெயம்கொண்டானின் ஞாபகம் வந்துச்சு!
வளரும் பாடலாசிரியராகவும் இருந்து கொண்டு சினிமா கனவுகளுடன் சென்னை நோக்கி வரும் இளைஞர்களுக்கு இருக்க இடமும் உண்ண உணவும், வேலைவாய்ப்பும் கொடுத்தபடி கே.கே.நகர், காமராஜர் சாலையில் சின்ன இடத்தில் ‘கவிஞர் கிச்சன்' எனும் ஹோட்டலை பெரிய மனதுடன் நடத்தி வரும் என் நண்பர் ஜெயம்கொண்டான், நல்ல கை பக்குவம் உடையவர்.

சிவகங்கை சீமையை சேர்ந்தச் எனக்கும் காரைக்குடி செட்டி நாட்டு சமையல் மீது ஒரு பெரிய பாசம், நேசம் உண்டு. எனவே என் நட்பு ஜெயம்கொண்டானுக்காகவும், சென்னை வாழ் மக்களின் நாக்கிற்கு நல்ல ருசி தருவதற்காகவும் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் பல லட்சம் செலவில் ஒரு செட்டிநாடு உணவகம் ஆரம்பிக்க நல்ல இடம் பார்த்து வருகிறேன்! தெரியாத தொழிலில் இழந்ததை நமக்கு தெரிந்த தொழிலில் தானே எடுக்கமுடியும்," என்றார்.
எது, எப்படியோ கவிஞருக்கும், கஞ்சாவிற்கும் ஹோட்டல் தொழில் ஒரு சேர கைகொடுத்தால் சரி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications