மக்கள் நெருங்கவிடவில்லை... சசிபெருமாள் மரணம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. விளக்கம்
கன்னியாகுமரி : டாஸ்மாக் கடை மூட வலியுறுத்திய போது சசிபெருமாள் மரணமடைந்தது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுமக்கள் நெருங்கவிடாததால் தான் சசிபெருமாளைத் தடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரென 200 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்திய போது, உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கினார்.
டவரின் மீதிருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணம் குறித்து விளக்கமளித்துள்ள கன்னியாகுமரி எஸ்.பி., மணிவண்ணன், ஏழு நாளில் சம்பந்தப்பட்ட கடையை அடைக்க உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடையை இன்றே அடைக்க வேண்டும் என சசிபெருமாள் வலியுறுத்தியதாகவும் கூறினார். கயிறு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் சசிபெருமாள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும், மக்கள் நெருங்க விடாதால், போலீசாரால் சசிபெருமாளை தடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சசிபெருமாள் உயிரிழப்பு குறித்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய கன்னியாகுமரி எஸ்.பி. மணிவண்ணன், பிரேத பரிசோதனை முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications