தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. இரட்டை ரயில் பாதைக்கு அடிக்கல்
கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கலை ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் நாட்டினார்
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இரட்டை ரயில் பாதை திட்டத்தை மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இரட்டை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது இருந்தது. இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் ஆகிய பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை அமைக்க நான்காயிரத்து இருநூற்று ஐம்பது கோடி ரூபாயில் திட்டம் தயார் செய்யப்பட்டு அந்த திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் நாகர்கோவில் ரயில் நிலைய 2 மற்றும் மூன்றாவது நடைமேடையில் நகரும் படிகட்டுகளையும், 100 சதவீத மின்விளக்குகள் மற்றும் இலவச வை- ஃபை வசதி சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் , தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications