ஓடு உடைத்து, பேச்சுப் போட்டி நடத்தி சிறுவர்கள் தினத்தைக் கொண்டாடிய காரைக்குடி பள்ளி
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிறுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா இன்று(14.11.16) சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் எஸ். முத்துக்குமார் தலைமையேற்றார்.. தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் மாணவர்கள் பாட்டு, நடனம், நாடகம், கீபோர்டு இசைத்தல், கவிதை வாசித்தல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைத்து மாணவர்களையும் மகிழ்வித்தனர். மாணவர்கள் பாரதி மற்றும் சோலை ஐயப்பன் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

பழனிக்குமார் மற்றும் ஷேக் முஹம்மது சபிக் கராத்தே மூலம் ஓடுகளை உடைத்து அனைவரின் பாராட்டைப் பெற்றனர். இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பூங்கொத்து செய்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பி. கண்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மாணவர்களே இந்நிகழ்ச்சிக்களை தொகுத்து வழங்கியது அனைவரின் பாராட்டைப் பெற்றது.

பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் மீனாட்சி செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications