உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகரின் கைகளை கட்டிப்போட்டு விட்டது - புகழேந்தி குஷி கமெண்ட்!
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகரின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டது என கர்நாடகா அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.
மதுரை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது என கர்நாடகா அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் 18 எம்.எல்.ஏக்கள் தொகுதி காலி என்று அறிவிக்கக் கூடாது. அந்த 18 தொகுதிகளில் இடைதேர்தல் என்ற அறிவிப்பையும் ஏற்க முடியாது என நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார்.

இதுகுறித்து கூறிய கர்நாடகா அதிமுக நிர்வாகி புகழேந்தி திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தவுடன் வேகமாக வேலைகள் நடைபெற்றன.
எம்.எல்.ஏக்களின் விடுதி அறைகள் பூட்டப்பட்டன.இந்த நிலையில் 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த நடவடிக்கை எதையும் செய்ய இயலாத வகையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் சபாநாயகரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
தினகரன் கொடுத்த ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் வாதிட்டு இந்த தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார். இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி'' என கூறினார்.












Click it and Unblock the Notifications