நீதித்துறை என்ற தூணில் துளைபோட்டு அதை பலவீனமாக்க நினைக்கிறார் கட்ஜூ: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதிக்கான கண்ணியத்தையே மார்க்கண்டேய கட்ஜூ இழந்து விட்டார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கட்டாயப்படுத்தி, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாவட்ட நீதிபதி ஒருவரை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணி நியமனம் செய்ய வைத்ததாக தி.மு.க. மீது பெயர் குறிப்பிடாமல் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். மேலும், இதை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

Karunanidhi attacks Katju and questions timing of his charges

மார்க்கண்டேய கட்ஜூவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அறிக்கை விடுத்துள்ளார். அதில், ''நீதிபதிக்கான கண்ணியத்தையே மார்க்கண்டேய கட்ஜூ இழந்து விட்டார். அவரது கருத்து நீதியின் கழுத்தை நெரிப்பதாக இருக்கிறது.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு, 10 ஆண்டுகள் கழித்து தற்போது கட்ஜூ கருத்து கூறுவது ஏன் என்று தெரியவில்லை.

நீதித்துறை என்ற தூணில் துளைபோட்டு அதை பலவீனமாக்க நினைக்கிறார் கட்ஜூ. ஆட்சியில் பதவியை பெற்றுவிட்டு, அந்த அரசு மீதே குற்றம் சாட்டுவது சரிதானா? காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும்போது, இதுகுறித்து மார்க்கண்டேய கட்ஜூ மவுனம் சாதித்தது ஏன்?'' என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+