மீனவர் சட்டதிருத்த மசோதா மீனவர்களுக்கு எதிரானது - கருணாநிதி கண்டனம்
சென்னை: மீன்படிச் சட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள திருத்தம் மீனவர்களுக்கு எதிரானது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சட்டப் பேரவையின் கடைசி நாளில், மீன்பிடிச் சட்டத்தில் அதிமுக அரசு கொண்டு வந்துள்ளதுள்ள திருத்தத்தால் மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர்.மீன்பிடி தொழிலில் 18 வயதுக்குக் குறைவானவர்களை ஈடுபடுத்தக் கூடாது.

விதிமுறைகளை மீறிச் செயல்பட்டால், ஆயுள் காலத்துக்கும் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும். அரசு சலுகைகளும் ரத்தாகும். மீனவர்கள் தங்களது படகுகளின் நீளத்தை அதிகரிப்பதோடு, படகின் வடிவமைப்புக்கு ஏற்ற குதிரைத் திறனில், எஞ்சின் பொருத்த வேண்டும்.
மீன்பிடி விசைப்படகுகள், ஐந்து கடல் மைல்களுக்கு அப்பாலும், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் 12 கடல் மைல்களுக்கு அப்பாலும் சென்று மீன் பிடிக்க வேண்டும் உள்பட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் கடற்படையினரால் தொடர்ந்து பல வகையிலும் மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துவரும் மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அரவணைக்க வேண்டிய தமிழக அரசு புதிய மசோதா மூலம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனையை நிறைவேற்றிட வழிவகை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications