Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த உழைப்பால் பல கல்வி நிறுவனங்களை கண்டவர் ஜேப்பியார்: கருணாநிதி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியாரின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Karunanidhi condoles Jeppiaar's death

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஜேப்பியார் மறைவு- இரங்கல்!

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை தலைவருமான ஜேப்பியார் சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.

ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து, தன்னுடைய சொந்த உழைப்பின் காரணமாக பல கல்வி நிறுவனங்களைக் கண்டு திறமையாக நடத்தி வந்தார். அவருடைய மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+