நா. முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியும், வருத்தமும் தருகிறது.. கருணாநிதி இரங்கல்
சென்னை: கவிஞர் நா. முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சி தருவதாக திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
நா. முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் "தங்கமீன்கள்" என்ற திரைப்படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"" என்ற பாடலுக்காகவும் "சைவம்" திரைப்படத்தில் "அழகே அழகே" என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர்.
என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications