கருணாநிதிக்கு பாதி சுயநினைவு திரும்பியது.. நாளை முழுதாக குணமடைய வாய்ப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கொஞ்சம் சரியாகி, தற்போது அவருக்கு பாதி சுயநினைவு திரும்பி இருப்பதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கொஞ்சம் சரியாகி, தற்போது அவருக்கு பாதி சுயநினைவு திரும்பி இருப்பதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவில் ஐசியு பிரிவில் மருத்துவர்கள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலையில் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டது. அதிகாலை அவரது உடல் நிலை கொஞ்சம் சரியானது.
அவருக்கு இன்று காலை, மொத்தமாக ரத்த அழுத்தம் குணமானது. அதன்பின் சிறுநீரக தொற்று மட்டுமே இருந்தது. இதற்காக அதிகப்படியான மருந்துகள் கொடுத்ததால், அவரது உடல்நிலையில் சுணக்கம் ஏற்பட்டது. அதோடு அவர் மயக்க நிலைக்கும் சென்று இருக்கிறார் .
இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு பாதி நினைவு திரும்பி உள்ளது. சிகிச்சை காரணமாக 18 மணி நேரமாக கருணாநிதி மயக்க நிலையில் இருந்தார். உடல்நிலை முன்னேற்றம் கண்டதை அடுத்து பாதி நினைவு திரும்பியது.
நாளை முழு நினைவு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே உடல்நிலை நீடித்தால் இரண்டு நாட்களில் மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல வாய்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications