தயவுசெய்து கலைந்து சொல்லுங்கள்.. தலைவர் நலமுடன் இருக்கிறார்.. தொண்டர்களிடம் பேசிய ஆ. ராசா
திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார்,தொண்டர்கள் எல்லோரும் கலைந்து செல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா காவேரி மருத்துவமனைக்கு வெளியே இருந்த தொண்டர்களிடமும் பேசி இருக்கிறா
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார்,தொண்டர்கள் எல்லோரும் கலைந்து செல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா காவேரி மருத்துவமனைக்கு வெளியே இருந்த தொண்டர்களிடமும் பேசி இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதால், பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது.

சில நிமிடம் முன், காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானது . அதில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் மீண்டும் சீராகி வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை மீண்டும் சீராகி வருகிறது என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் மருத்துவமனைக்கு வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொண்டர்களிடம் பேசினார். அங்கிருந்த தொண்டர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினார்.
அவர் குரல் கேட்கவில்லை என்றதும், சில தொண்டர்கள் அவரை தூக்கினார்கள். அதன்பின் போலீஸ் கொடுத்த மைக் மூலம் அவர், தொண்டர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினார்.
கருணாநிதி நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் சரியாக சென்றதால்தான் அவர் நலமுடன் இருக்க முடியும்.
மருத்துவமனைக்கு வெளியே அமைதி நிலவ வேண்டும். அதனால் தொண்டர்கள் எல்லோரும் கலைந்து செல்லுங்கள், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications