கருணாநிதி பிறவி போராளி... வில்பவர் அதிகம்.. வெல்வார் .. பினராயி விஜயன்
கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பது அனைவருக்கும் தெரியும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பது அனைவருக்கும் தெரியும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் காவேரி மருத்துவமனையில் தெரிவித்தார்.
கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முன் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, ராகுல்காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் விஜய்யும், அஜித்தும் நேரில் சென்று கருணாநிதியின் உறவினர்களிடம் நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று காலை கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னைக்கு வந்து காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பது அனைவருக்கும் தெரியும்.
தற்போதும் அவரது மனஉறுதியால் அவர் உடல்நிலையிலும் தேறி வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது.
அவர் வேகமாக தேறி வருவதால் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார் பினராயி விஜயன்.