லோக்சபா தேர்தல்: ஏப்ரல் 5-ந் தேதி முதல் கருணாநிதி பிரசாரம்- கோவையில் தொடங்குகிறார்!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5-ந் தேதி கோவையில் இருந்து தொடங்குகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தமது லோக்சபா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் விவரத்தை வெளியிட்டார். கோவையில் ஏப்ரல் 5-ந் தேதி பிரசாரத்தை தொடங்கும் கருணாநிதி, ஏப்ரல் 21-ந் தேதி மத்திய சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் களைகட்டியிருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என பல தலைவர்களும் களத்தில் குதித்துவிட்டனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியும் ஏப்ரல் 5-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 6-ல் கொங்கு மண்டலம்
5-ந் தேதி கோயம்புத்தூரில் பிரசாரத்தை தொடங்கும் கருணாநிதி 6-ந் தேதியன்று திருப்பூர், ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் பின்னர் 7-ந் தேதி சேலத்திலும் 10-ந் தேதியன்று புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார் கருணாநிதி.
11,12-ல் தஞ்சை டெல்டா
11-ந் தேதி இரவு மயிலாடுதுறை, திருவாரூரிலும் 12-ந் தேதி தஞ்சாவூர், திருச்சியிலும் கருணாநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
13-ல் மதுரை
13ந் தேதி மாலை 5 மணிக்கு துவரங்குறிச்சியிலும் பின்னர் இரவு 7 மணிக்கு மதுரையிலும் கருணாநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஸ்ரீபெரும்புதூர்..
16-ந் தேதியன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வேலூரிலும் 17--ந் தேதி காஞ்சிபுரத்திலும் அவர் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
19 முதல் 21-ந் தேதி வரை..
19ந் தேதியன்று திருவள்ளூர், வடசென்னையிலும் 20-ந் தேதி தென் சென்னையிலும் 21-ந் தேதி மத்திய சென்னையிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications