அதிமுக ஆட்சியில்தான் எத்தனை எத்தனை அகால மரணங்கள்.. கருணாநிதி பட்டியல்!
சென்னை: அதிமுக ஆட்சியில் அகால மரணங்கள் தொடருவது வேதனை தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட அகால மரணங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை...

ஜெயலலிதா வந்தாலே
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் ஏற்பட்ட போதெல்லாம், அகால மரணங்கள் நடக்கின்றன.

கும்பகோணம் மகாமக சாவுகள்
உதாரணமாக, கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் இறங்கி குளித்த போது, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஏர்வாட தீவிபத்தில் 28 பேர் பலி
அதேபோ ஏர்வாடியில் தீ விபத்து ஏற்பட்டு, அதில், 28 பேர் பலியாகினர்.

ஸ்ரீரங்கம் மணவிழாவில் 54 பேர் பலி
ஸ்ரீரங்கத்தில் மண விழா ஒன்றில் நடந்த தீ விபத்தில் 54 பேர் பலியாகினர்.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து
கும்பகோணம் பள்ளியில் தீப்பிடித்து 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர்.

வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் 42 பேர் பலி
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்களும், 19 ஆண்களும் என மொத்தம் 42 பேர் இறந்தனர்.

வட சென்னையில் 6 பேர் பலி
அதற்கு ஒரு மாதத்திற்கு முன், வடசென்னயில் வெள்ள நிவாரண பொருட்கள் வாங்க வந்த கூட்ட நெரிசலில் 6
பெண்கள் பலியாகினர்.

சென்னை கட்டட விபத்தில் 61 பேர் பலி
தற்போது சென்னை அடுக்குமாடிக் கட்டட விபத்தில் 61 பேரும், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேரும் பலியாகியுள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications