என் தந்தை போன்றவர் கருணாநிதி.. அவரது மரணம் எனக்கு பேரிழப்பு.. சோனியா காந்தி உருக்கம்
சென்னை: கருணாநிதியின் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சோனியா காந்தி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உங்களின் தந்தை கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் துயரமடைந்தேன். உலக அரசியலில் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் ஒரு உயர்ந்த மனிதர் கருணாநிதி.
தனது வாழ்க்கையை சமூக நீதிக்காகவே அர்ப்பணித்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

அவர் தனது நீண்ட வாழ்க்கை பயணத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றிற்காவும் மற்றும் நாட்டின் மிக ஏழையான மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காகவும் ஓய்வின்றி உடனின்றவர்.
சிறந்த இலக்கியவாதியான கருணாநிதி தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் கலாச்சாரம் மற்றும் கலைக்காகவும் பெரும் பங்காற்றி உலக அரங்கில் ஒரு அங்கிகாரத்தை பெற்று கொடுத்துள்ளார்.
UPA Chairperson Smt. Sonia Gandhi writes to Thiru @mkstalin, President DMK, condoling the passing away of @kalaignar89. #Karunanidhi pic.twitter.com/SYF9dC0Gww
— Sonia Gandhi (@_SoniaGandhi) August 8, 2018
அவரது தலைமையில் தமிழக அரசும் அரசியலும் சிறப்பாக இருந்தது. அதற்காகவே அவர் எப்போதும் போற்றப்படுவார் மதிக்கப்படுவார். அவர் வழியில் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததை நான் நம்புகிறேன்.
அவர் என்னிடம் எப்பொழுதும் அன்புடன் நடந்து கொண்டவர். அவர் எனக்கு தந்தை போன்றவர். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு என கூறியுள்ளார்.
கருணாநிதி போன்ற ராஜதந்திரியை இனி பார்க்க முடியாது. அவரை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என சோனியா காந்தி முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications