மெரினா கருணாநிதிக்குத்தான்.. கொந்தளிப்பில் மக்கள்.. வைரலாகும் மெரினா ஃபார் கலைஞர்!
திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்க செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்க செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக மெரினா ஃபார் கலைஞர் (#Marina4Kalaignar) என்ற ஹேஷ்டேக் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.
காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
|
வேறு யாருக்கு
அவருக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கு என்று இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
தகுதி உள்ளது
மெரினாவில் இடம் கொடுப்பது சட்ட சிக்கல் அல்ல சட்ட விரோதமாக இருந்தாலும் சரி, கருணாநிதிக்கு அங்கு இடம்பெற தகுதி உள்ளது என்றுள்ளார்.
|
மோசம்
கடல் நடுவில் வள்ளுவரை அழகு பார்த்தவருக்கு கடற்கரையில் இடம் மறுப்பு அநாகரிக அரசியல், என்றுள்ளார்.
|
வன்மத்தின் உச்சம்
5 முறை முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞருக்கு மெரினாவில் இடம் இல்லை என சொல்வது வன்மத்தின் உச்சம் , என்றுள்ளார்.
|
மிக மோசம்
இப்படி கீழ்த்தரமான அரசியலை செய்யாதீர் என்று இவர் கூறியுள்ளார்.
|
தகுதி
அறிஞர் அண்ணாவின் அருகில் இருக்கும் ஒரே தகுதி கொண்டவர் திமுக தலைவர் கருணாநிதி மட்டும்தான் என்று இவர் கூறியுள்ளார்.