கலாம் உடல் அடக்கம்.. கருணாநிதியும் பங்கேற்க மாட்டார்?
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஜெயலலிதாவைப் போல திமுக தலைவர் கருணாநிதியும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
அப்துல் கலாமின் உடல் இன்று பொதுமக்கள் பார்வைக்காக அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் உடல் நாளை காலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பல்துறைப் பிரமுகர்கள், லட்சோபம் லட்சம் பொதுக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் தான் பங்கேற்க இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது சார்பில் 7 அமைச்சர்களை ஜெயலலிதா அனுப்பி வைக்கிறார்.
இதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.
அதேசமயம், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் பங்கேற்பார்கள். ஸ்டாலின் இன்றே மதுரை போய் விட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications