சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா அப்பீல் செய்தால் தி.மு.க. ஆதரவு: கருணாநிதி
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தால் தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இருப்பினும் குமாரசாமியின் தீர்ப்பில் கூட்டல் கணக்குகளில் பிழை இருக்கிறது.. சில அம்சங்கள் விடுபட்டுப் போயிருக்கிறது என்று தி.மு.க. உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே குற்றம்சாட்டி வருகின்றன.

அத்துடன் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் இந்த பிழைகளை சுட்டிக்காட்டி இதனடிப்படையில் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வாங்குவது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தால் தி.மு.க. அதற்கு ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகனும் ஒரு தரப்பாக மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications