For Daily Alerts
Just In
அண்ணா பிறந்த நாள்... சிலைக்கு கருணாநிதி நேரில் அஞ்சலி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியினர் பெரும் திரளாக அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் 105வது பிறந்த நாளை இன்று திமுகவினரும், அதிமுகவினரும், மதிமுகவினரும், மற்ற பிற கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று நேரில் வந்து மலர் தூவி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், துரைமுருகன், ஜே. அன்பழகன் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதேபோல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக தொண்டர்கள் அண்ணாவின் சிலைக்கும், படத்திற்கும் அஞ்சலி செலுத்தினர்.
Comments
English summary
DMK chief Karunanidhi paid floral tribute to party founder and former CM Annadurai on his 105th birth anniversary today.
Story first published: Sunday, September 15, 2013, 12:56 [IST]