கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட ரூ570 கோடி மர்மமும் தேர்தல் ஆணையமும்
அது மாத்திரமா? திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் கடத்தப்படவில்லையா? அதற்கு முன்பே 5 கன்டெய்னர்களின் கடத்தப்பட்டு விட்டன என்றும், அவை பிடிபடவில்லை என்றும், ஆனால் இந்த 3 கன்டெய்னர்கள் பிடிபட்டு விட்டன என்றும் கூறப்பட்டது. அது பற்றி எவ்வளவு செய்திகள் வந்தன? அத்தனையும் வங்கிக்குச் சொந்தமான பணம் என்று கூறி மூடப்பட்டு விட்டன. அதிலே தேர்தல் ஆணையம் ஏதாவது செய்ததா? எதற்காக தேர்தல் ஆணையம்?

தமிழகம் முழுவதிலும் அத்தனை தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என்று தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. தற்போது அதையும் தாண்டி ஏதோ பா.ஜ.க., பா.ம.க., நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதி களிலும் 3 வாரங்களுக்குத் தேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கிறார்கள் என்றால் என்ன நியாயம்? இரண்டு தொகுதிகளில் பணப் பட்டுவாடா பற்றி விசாரிக்க மூன்று வாரங்கள் தேவையா? அதுபற்றி அங்கே தேர்தலில் போட்டி யிடும் முக்கிய கட்சிகளின் கருத்துக்களை அறிந்திட வேண்டாமா? பா.ம.க., வும், பா.ஜ.க.வும் நீதி மன்றத்தில் மனு கொடுத்தார்கள் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தார்கள்? யாருடைய துhண்டுதலின் பேரில் வழக்கு தொடுத்தார்கள்? அதற்காக இரண்டு தொகுதிகளின் தேர்தல்களை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா? இவைகள் எல்லாம் யாரை ஏமாற்று கின்ற காரியம்? இதற்காகவா ஒரு தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையம் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?
முதலமைச்சர் காலிலே விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா? இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக்காது, நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?
நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications