மோடிக்கு ஜெ. கடிதம்: எழுதுங்க... எழுதுங்க... எழுதிக் கொண்டே இருங்க- ராமதாஸ்
சென்னை: பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதால் பலன் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி போன்றே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் தெரிவித்துள்ளார்.
பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவது மட்டும் போதாது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் அதையே கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
கடிதம்
மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா இரண்டாவது முறையாக கடிதம்: எழுதுங்க... எழுதுங்க... எழுதிக் கொண்டே இருங்க!
|
இடித்துரை
கலைஞரின் பேச்சை மதிக்காதது தான் திமுக தோல்விக்கு காரணம்: அன்பழகன் - இது பொருளாளருக்கு பொதுச்செயலாளர் வழங்கும் இடித்துரை தானே?
|
பி.இ.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைந்தது:பொறியியல் படிப்பை பொரி விற்கக்கூட தகுதியற்றதாக மாற்றிய பெருமை திராவிட கட்சிகளுக்கே!
|
முகமது அலி
குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்: பலத்தில் மட்டுமின்றி, பாசத்திலும், துணிச்சலில், நியாயத்திலும் முத்திரை பதித்தவருக்கு அஞ்சலி!












Click it and Unblock the Notifications