அரசியலையும் இலக்கியத்தையும் இணைத்து அசரடித்த கருணாநிதியின் வரலாற்றுக் கவிதை!
சென்னை: தேர்தல் அரசியல் களத்தில் தம்முடைய கட்சி தோல்வியைத் தழுவிய போதும் மனம் தளராமல் கட்சி பிடி தளராமல் கருணாநிதி மீண்டும் அரியாசனம் ஏறினார். இதற்கு கருணாநிதியின் ஆளுமை மட்டுமே காரணமல்ல.. அவரது இலக்கிய ஆளுமையும்தான் அக்கட்சி தொண்டர்களை இறுகக் கட்டிப் போட்டது.
1986-ம் ஆண்டு அருப்புக்கோட்டை, நெல்லை இடைத் தேர்தல்களில் திமுக தோற்றுப் போகிறது. இந்த நிலையில் திமுகவின் முப்பெரும் விழா சென்னையில் செப்டம்பர் 15-ல் நடைபெற்றது.
முப்பெரும் விழா கவியரங்கில் கருணாநிதி பங்கேற்றார். கவியரங்கையே அரசியல் மேடையாக்கி அதகளப்படுத்தினார் கருணாநிதி.
அதில், மானமிகு வாலியை மறைந்து இருந்து மாண்புமிகு ராமச்சந்திரன் தாக்கியதாலே அந்த கம்பனும் போற்ற தயங்கினான்... வீழ்ந்தாலும் வெற்றி வாலிக்குதானே என எம்ஜிஆரை தாக்கி அவர் கவிதை படிக்க அரங்கமே அதிர்ந்தது.
இந்த அரசியல் கவிதையிலேயே தமிழ் இலக்கியங்களை பட்டியலிடும் கவிதையையும் அழகுற கருணாநிதி வாசித்திருப்பார். அமர்க்களப்படுத்திய அந்த கவிதை.. கருணாநிதியின் குரலிலேயே...